Saturday, March 2, 2013

உலகையே அடக்கி ஆண்ட பிரிட்டிஷ் காரர்களை அடக்கி மண்டியிட வைத்தவர். வெள்ளையர்கள் மன்னிப்பு கேட்டு பட்டயம் அனுப்பியது மகாராணி வேலுநாச்சியாரிடம் மட்டும் தான் .வெள்ளையரை போரில் வென்ற முதல் மகாராணியும் இவர்தான். வெள்ளையரை எதிர்த்தவர்களில் தன் வாழ்நாள் முழுவதும் அரசாண்டவரும் இவர் மட்டுமே.

சிறு வயதிலேயே பல மொழிகளையும் போர்கலைகளையும் கற்றுத்தேர்ந்தவர்.தன் கைகளால் வாளை இரண்டாக உடைத்தவர். சேதுபதி மன்னருக்கு மகளாய் பிறந்து சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத தேவரை மணந்தார்.ஆயுதமின்றி காளையர்கோவிலில் வழிபட்ட முத்துவடுகநாதரை நவாபும் ஆங்கிலேயரும் பெரும் படைகொண்டழித்தனர். சிலகாலம் கழித்து தன்நாட்டை மருதுபாண்டியர் ஹைதர்அலி படையுதவியுடன் நாட்டை மீட்டார். கணவரை கொன்ற தளபதி ஜோசப் ஸ்மித், பான் கழுத்தில் கத்தி வைக்க அவர்கள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட போது இந்திய போர் தர்மப்படி மன்னித்து உயிர்பிச்சை அளித்தவர். அவரின் 215வது நினைவுநாளில் மகாராணியின் வீரத்தைப் போற்றுவோம்.

।வி .ராஜமருதவேல் ।

No comments:

Post a Comment